இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில் 'அகிலன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் பேசிய ஜெயம் ரவி பலநாள் ரகசியம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது ஜெயம் படத்தில் பாதி தான் நான் நடிச்சேன். ஜெயம் படத்துல எனக்கு டூப் போட்டது மைக்கேல் மாஸ்டர்.சுவர் மேல சைக்கிள் ஓட்டுனது எல்லாம் அவர் தான் பண்ணினாரு.10 வருஷம் ஆகிடுச்சு படத்தில பாதி அவர் தான் பண்ணினதரு மீதி தான் நான் பண்ணினேன் என்றும் அதில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!