தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெயம். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் ஜெயம் ரவி. இப்படத்தைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, தனி ஒருவன் எனப் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது பொன்னியின் செல்வன், அகிலன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதில் பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகின்றார். இப்படம் செம்டம்பர் மாதம் 30ம் திகதி ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில் இவர் அண்மையில் தனி ஒருவன் திரைப்படத்திற்காக விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய போது கூறியதாவது தயாரிப்பாளர் மகன் என்பதால் மட்டுமே தான் முன்னுக்கு வரவில்லை என்றும் மிகவும் கடினமான உழைப்பே தன்னை முன்னேற்றியது என்றும் குறிப்பிட்டார்.
திரையுலகில் 3 வருடங்கள் தான் காணாமல் போனதாகவும் அப்போதும் தான் கடினமாகவே உழைத்ததாகவும் தெரிவித்தார். அதன்பிறகு இந்த கடின உழைப்பையே தான் கொடுத்தாலும் எதற்காக உழைக்கிறோம் என்ற புரிதலுடன் தான் உழைத்ததாகவும் அந்த புரிதலே தனக்கு தனி ஒருவன் படத்திற்காக விருதை பெற்றுத் தந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பாலியல் தொழில் செய்ய சொல்லி மிரட்டல்- துணை நடிகை விடுத்த பரபரப்பு புகார்…!
- நடிகர் தனுஷின் தாய்க்கிழவி பாடலின் மீது எழுந்துள்ள புகார்-காரணம் என்ன தெரியுமா..?
- தூக்கிட்ட நிலையில் பிரபல நடிகர் -அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- பாலிவுட் நடிகைகளுக்கு வேறு..தமிழ் நடிகைகளுக்கு தான் இப்படி: உண்மையை உடைத்த பிரியாமணி..
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!