தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக வலம் வருபவர் தான் மீசை ராஜேந்திரன். இவர் தற்பொழுதும் சில திரைப்படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் அண்மையில் தனது சொந்த ஊருக்குச் சென்ற போது சில பிரச்சினைகளில் சிக்கினார்.
இதனால் போலீஸில் புகார் அளித்து விட்டு சென்னைக்கு தன் குடும்பத்துடன் காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அவர் காரை சிலர் வழிமறித்து காரின் பின்புற கண்ணாடியை கல்வீசி உடைத்தனர். இது தொடர்பாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் மீசை ராஜேந்திரன் இந்த சம்பவம் குறித்து சிலர் தன் மீது வதந்தி பரப்பி வருகிறார்கள் என குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், " நான் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தேன் என என் மீது தவறான வதந்தியை சிலர் பரப்பி வருகிறார்கள். இதற்கு மூலகாரணம், எங்களுடைய ஊர் முக்கூடலில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் பெயரை பயன்படுத்தி சிலர் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளனர். இதை நான் தட்டி கேட்டேன். மேலும் பத்து வருடமாக கோர்ட் மற்றும் வழக்கு தொடர்ந்து பல தீர்ப்புகளை வாங்கி வைத்துள்ளேன்.
கடைசி செவ்வாய் கிழமை அன்று என் குடும்பத்தோடு அங்கு சாமி தரிசனம் செய்ய போயிருந்தேன். அப்போது அந்த கோயிலில் வெள்ளை அடிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தது. அறநிலையத்துறையிடம் முறையாக அனுமதி வாங்கிதான் பணிகள் நடக்கிறதா என அர்ச்சகரிடம் கேட்டபோது அவர் இல்லை என கூறினார்.
இதனிடையே நாங்கள் பேசி கொண்டிருக்கும்போது பணமோசடி செய்தவர்கள் என்னிடம் ' நீ ஏன் சாமி கும்பிட வந்த, உன்னை அடிச்சுருவேன், வெட்டிருவேன், குத்திடுவேன்' என என்னை மிரட்டினர். அப்போது என் மகள் என் கையை பிடித்து இழுத்து காருக்கு அழைத்து சென்றுவிட்டார். இது தொடர்பாக போலீசிடம் புகார் கொடுத் திரும்பிய போது என் காரை அடித்து நொறுக்கிவிட்டனர். அதன் பிறகு எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தேன், அந்த கும்பல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை திசை திருப்பவே முக்கூடலை சார்ந்த பண மோசடி செய்பவர்கள் சிலர் இந்த வதந்தியை பரப்பி வருகிறார்கள். இது தான் உண்மை " என மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- வீட்டுக்கு வந்ததும் கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- நடிகை சாய் பல்லவிக்காக ரசிகர் ஒருவர் செய்த செயல்-தீயாய் பரவும் புகைப்படம்..!
- ரசிகருக்காக ராஷ்மிகா செய்த செயல்-புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!