• Sep 20 2024

விஜய் என்னை அப்படி சொல்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை- செம குஷியில் இருக்கும் கீர்த்திசுரேஷ்- இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் கீர்த்திசுரேஷ். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு,சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.சிவகார்த்தியேனுடன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் இவரை ரசிகர்களிடம் மிகவும் பிரபல்யப்படுத்தியது.

தமிழில் அவர் கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. . இதனையடுத்து அவரது நடிப்பில் ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. எனவே தமிழில் அடுத்த ரவுண்ட் வர கீர்த்தி சுரேஷ் காத்திருக்கிறார் 


இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிசுகிசு தீயாக பரவியது. அதாவது விஜய்யும், கீர்த்தி சுரேஷும் காதலிக்கிறார்கள் என்றும்; கீர்த்தி சுரேஷை விஜய் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் பேசப்பட்டது. ஆனால் அதில் உண்மை துளியும் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து விஜய் - கீர்த்தி சுரேஷ் குறித்த பேச்சு அடிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 


இந்த நிலையில்  விஜய் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியதாவது "மகாநடிகை படத்தை பார்த்த பிறகு அப்போதே எனக்கு ஃபோன் செய்து பாராட்டினார் விஜய். அதையும் தாண்டி அவர் மேடையில் என்னைப் புகழ்ந்து சொன்னது ரொம்பவே சந்தோஷம். சத்தியமாக நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. அப்படி சொல்ல வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. இருந்தாலும் சொன்னார்" என்றார்.


Advertisement

Advertisement