• Sep 20 2024

“அதை தூக்கி எறிய மனம் வரவில்லை..” ஐஸ்வர்யா வெளியிட்ட பதிவு-இது தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனது கணவரும் நடிகருமான தனுஷைப் பிரிந்ததை அடுத்து அறிவிப்பிற்கு பிறகு இவர் தன்னுடைய உடல்நலனில் அதிகமாக கவனம் செலுத்தி வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகின்றார்.


இவர் வெளியிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களும் அதிக லைக்ஸ்களை இட்டு வருவார்கள்.



இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குநர் என்பதும் ’3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நிலையில், விரைவில் ஹிந்தி படம் ஒன்றினையும் இயக்க உள்ளார்.



மேலும் இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பைரல் போடப்பட்ட சில கோப்புகள் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது: காகிதத்தில் பேனாவால் கதை எழுதுவது ஒருவித உணர்வு. கதையின் பரிணாமம் என்பது முதலாவது எழுதுவது, 2வது அது தட்டச்சு செய்வது அதன்பின் சில மாற்றங்களை சேர்ப்பது என்பது வழக்கமானதாகும். ​​



அத்தோடு காலப்போக்கில் நாம் தட்டச்சு செய்த பதிப்பை பார்க்கும்போது அதில் இருந்து ஒரு தாளை கூட தூக்கி எறிய எளிதில் மனசு வராது.ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை படிக்கும்போது அதில் ஏதாவது புதிதாக தோன்றலாம். அதனை அப்டேட் செய்யவே நாம் விரும்புவோம்’ என பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் கெமண்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement