தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் லவ் டுடே. இந்தப் படத்தில் கதாநாயகனாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்தார்.கதாநாயகியாக இவானா என்பவர் நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இப்படத்தில் நடித்த இவானா ஏற்கனவே தமிழில் நாச்சியார், ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார்.அப்போது லவ் டுடே திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு நெருக்கமான படுக்கையறை காட்சியில் எப்படி நடிப்பீர்கள் என்றும், உங்கள் அம்மா அப்பா அதற்கு என்ன ரியாக்ட் செய்தார்கள் என்றும் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த இவானா, நான் கதையைக் கேட்கும் போதே என் வீட்டில் இருப்பவர்களிடம் இதைப் பற்றி ஏற்கனவே கூறியிருந்தேன். அத்துடன் என் நட்பு வட்டாரத்திலும் இது பற்றி தெரிவித்திருந்தேன்.ன் பெற்றோர் கதைக்கு தேவையான பட்சத்தில் இப்படி நடிப்பதில் தவறில்லை என்று புரிந்து கொண்டதால், அந்த காட்சியில் நடிப்பதற்கு எனக்கு சம்மதம் கொடுத்தார்கள். அதன் பிறகு தான் நான் அந்த காட்சியில் நடித்தேன். மேலும் அப்படி ஒரு காட்சியில் நடித்தது குறித்து இதுவரை யாரும் என்னை தவறாக விமர்சிக்கவே கிடையாது.
அது மட்டுமல்லாமல் அந்த காட்சியில் நடிப்பதற்கு முன் நான் மிகவும் பதட்டத்துடன் இருந்தேன். ஆனால் அதற்கு நேர் மாறாக படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சி ரொம்பவும் கலகலப்பாகவே படமாக்கப்பட்டது. இதனால் அந்த காட்சியில் நடிக்கும் போது எனக்கு பயமோ, பதட்டமோ எதுவும் ஏற்படவில்லை. அது ஒரு நல்ல கருத்தை முன்னிறுத்தும் காட்சியாக தான் இருந்தது. ஒரு முக்கிய விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் எனக்கு மகிழ்ச்சி தான் என்று அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!