மும்பை பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தன் காதல் கணவரான ரித்தேஷை பிரிந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார். அதனை தொடர்ந்து ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில் தனது காதலர் குறித்து ராக்கி சாவந்த் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் ஆதில் கான் உடனான காதலுக்கு பிறகு மீண்டும் ராக்கி சாவந்த் குறித்து செய்திகள் குவிந்து வருகின்றார். இந்நிலையில் ஆதில் தனக்கு பிஎம்டபிள்யூ கார் கொடுத்ததைப் பற்றி அவர் பதிவிட்டுள்ளார். அத்தோடு துபாயில் தனது பெயரில் காதலர் ஒரு வீட்டை வாங்கியுள்ளதாகவும், மற்ற அனைத்தையும் விட அவரது அன்பை தான் அதிகம் மதிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஒரு ஆண் தனது காதலியை உறவின் ஆரம்பத்தில் தனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துவது பெரும்பாலும் இல்லை. இருப்பினும், ஆதில் மற்றும் அவரது குடும்பத்தினருடன் என்னை அறிமுகப்படுத்தினார்.
அவர் தனது குடும்பத்தில் இருந்து சில எதிர்ப்பு இருப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும் தனது கடந்த காலத்தைப் பற்றி அவரிடம் கூறியதற்காகவும். எதையும் மறைக்காமல் இருந்ததற்காகவும் பாராட்டினார்.
வேலையை விட்டு விலகுவது போன்ற எந்த கட்டுப்பாடுகளையும் ஆதில் தன் மீது விதிக்கவில்லை. ஆனால் சில விஷயங்கள் உள்ளன. அத்தோடு கவர்ச்சி குறைவான மற்றும் அதிக மூடிய ஆடைகளை அணிய வேண்டுமென்று ஆதில் விரும்புகிறார் என நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த்.
Listen News!