• Sep 20 2024

மகேஷ்பாபு பற்றி கமெண்ட் செய்ய நான் விரும்பவில்லை-போனிகபூரின் காரசாரமான பேச்சு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் அண்மையில் ஹிந்தி சினிமாவைப் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது" பாலிவூட்டால் நான் கேட்கும் சம்பளம் கொடுக்க முடியாது, அதனால் அங்கு நடித்து என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை" என கூறி இருந்தார்.

இதனால் பாலிவூட் சினிமாவை அசிங்கப்படுத்திவிட்டாரே என பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய மொழிகளில் படம் தயாரித்து வரும் போனி கபூர் அளித்திருக்கும் பேட்டியில் மகேஷ் பாபு பற்றி பேசி இருக்கிறார்.

"நான் இரண்டு துறைகளிலும் படங்கள் எடுக்கிறேன். இதுபற்றி கருத்து கூற நான் சரியான ஆள் இல்லை. மகேஷ் பாபு என்ன நினைக்கிறாரோ அதை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்கு காரணங்கள் அவரிடம் இருக்கலாம். அதை பற்றி நான் ஏன் கமெண்ட் செய்ய வேண்டும்."

"அவர் அப்படி சொல்கிறார் என்றால், அது அவருக்கு நல்ல விஷயமாக இருக்கும்" என போனி கபூர் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement