தென்னிந்திய சினிமாவில் தமது அயராத முயற்சியினால் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் மகேஷ்பாபு. இவர் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருவதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கின்றார். அதிலும் தமிழில் இவர் நடிப்பில் வெளியாகி ஸ்பைடர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அத்தோடு தற்பொழுது இவர் நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரிபாட்டா எனும் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
இதையொட்டி அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் ஹிந்தி சினிமாக்களில் நடிப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மகேஷ் பாபு “நிறைய ஹிந்தி படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஹிந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
தெலுங்கு சினிமாவிலேயே எனக்கு நட்சத்திர அந்தஸ்தும், ரசிகர்களின் பேரன்பும் கிடைத்துள்ளது. அதைவிடுத்து இன்னொரு மொழியில் நடிப்பது பற்றி நினைப்பது கூட இல்லை. தெலுங்கிலேயே பெரிய படங்கள் பண்ணவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” எனக் கூறியுள்ளார்.
பிறசெய்திகள்:
- OTT தளத்தில் வெளியாகப்போகும் KGF- 2 படம்- பெரிய தொகை கொடுத்து வாங்க போட்டி போடும் நிறுவனங்கள்..!
- கடும் வெயிலில் ஓட வைத்த இயக்குநர் பாலா-கோபத்தில் வீட்டுக்குக் கிளம்பிய சூர்யா
- நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு உதவும் சிவகார்த்திகேயன் -ஏன் தெரியுமா..?அவரே கூறிய தகவல்..!
- தளபதி 66 இல் விஜய்யுடன் இணைந்த முன்னணி நட்சத்திரங்கள்.. முழு லிஸ்ட்
- மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த தமன்னா-லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- சக்தி சொன்ன வார்த்தைகளால் உச்ச கட்ட பதற்றத்தில் பாரதி- ஆறுதல் சொன்ன சௌந்தர்யா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!