தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இதன்பின் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும், தற்போது தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரியா பவானி ஷங்கர், நான் 18 வயதில் இருக்கும் போதே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். நாங்கள் காதலிக்க ஆரம்பித்த போது என் காதலனிடம், இந்த பொம்மைகள் வாங்குவது.. அது கூட படுத்து தூங்குவது போன்ற விஷயங்களை எனக்கு பிடிக்காது.உன்னுடைய பணத்தை வீணாக செலவு செய்யாதே.அதெல்லாம் எனக்கு பிடிக்காது என்று கூறினேன் என கூறியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
Listen News!