• Sep 20 2024

அந்த எண்ணமே இல்லை அவரை சுற்றி சுற்றி வந்தது மட்டும் தான் நினைவிருக்கிறது- யுவன் சங்கர் ராஜா கூறிய சுவாரஸியமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வின்னர் திரைப்படத்தின் மூலம் முக்கிய இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவரது இசை பல பேரை அடிமையாக்கி வைத்துள்ளதோடு BGMகளின் நாயகன் என்றும் ரசிகர்கள் இவரைக் கொண்டாடி வருகின்றனர்.

இது தவிர இவரை Drug Dealer என்றும் அழைத்து வருகின்றனர். இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சிறந்து விளங்கும் இவருக்கு, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து பல்வேறு சேனல்களுக்கும் பேட்டி அளித்து வருகின்றார்.


அந்த வகையில் அண்மையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பதிலளித்திருந்தார். அப்போது டாக்டர் பட்டம் பெற்றது குறித்து நீங்கள் கூற விரும்புவது? என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது இசையமைப்பாளர் மற்றும் பாடகராக சிறந்து விளங்கியமைக்காக சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியது சந்தோஷம். மேலும் எனக்கு பெருமையாகவும் உள்ளது. காலம் தவறாமல் சரியான நேரத்தில் இந்த பட்டம் எனக்கு கிடைத்துள்ளது. இந்த பட்டத்தை பெறும்பொழுது, நான் கடந்த வந்த பாதை தான் நினைவுக்கு வருகிறது என்றார்.

மேலும் பேசிய இவர் எம்.ஜி.ஆர். பாடல்களை ரீமேக் செய்யும் எண்ணம் இல்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எங்கள் வீட்டிற்கு வரும்போது, நான் சிறு பையன். அவரை நான் சுற்றி சுற்றி வந்தது தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது என்றும் கூறியிருப்பதைக் காணலாம்.

Advertisement

Advertisement