• Sep 20 2024

சினிமாவைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது- எமோஷனலாக கண் கலங்கிய பார்த்திபன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வெளியாகிய திிரைப்படங்கள் மற்றும் பிரபலங்களைக் கொளரவிக்கும் விதமாக பல விருது வழங்கும் விழாக்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் அண்மையில் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நடைபெற்றது.

இதில் தமிழ் சினிமாவிற்கு மொத்தம் 10 விருதுகள் கிடைத்துள்ளன. அதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளைத் தட்டிச் சென்றது.இந்த விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு விருது வென்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், “இரவின் நிழல் மாதிரியான படம் எடுப்பதற்குப் பின்னால் நிறைய பிரச்சனைகள் உள்ளன. எனக்கு சொந்த வீடு, வாசலெல்லாம் கிடையாது. என்னுடைய மகளின் திருமணத்தின்போது மாப்பிள்ளையை வீட்டிற்கு வரவைத்து பொண்ணை காட்டுவதற்குப் பதிலாக நாங்கள் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்றோம்.

ஏனென்றால் நாங்கள் இருந்தது வாடகை வீடு. சினிமாவைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது” எனக் கூறும்போது எமோஷனலாக பார்த்திபன் கண் கலங்கினார். இதையடுத்து, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆறுதல் கூறி அவரைத் தேற்றினார். அதனைத் தொடர்ந்து பேசிய பார்த்திபன், தேசிய விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement