• Sep 20 2024

மீனா பஃன் மாதிரி இருப்பா யார் கண்ணு பட்டதோ தெரில இப்படி ஆகிடுச்சு- நெகிழ்ந்து பேசிய ரஜினிகாந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!


1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை மீனா 40 ஆண்டுகள் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக தென்னிந்திய ஸ்டார் நடிகர்களுடன் நடித்து தானும் ஒரு சிறந்த ஸ்டாராக மாறி ஏகப்பட்ட ரசிகர்கள் மனங்களில் நிறைந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் 40வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்ற நிலையில், நடிகைகள் ராதிகா, ரோஜா, சினேகா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இசையமைப்பாளர் தேவா, நடிகர் பிரசன்னா, காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் மீனாவை பற்றி பேசியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


வீடியோ கால் மூலமாக மோகன்லால், மம்மூட்டி, பிரித்விராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீனா பற்றி பேசியது தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

சும்மா சப்பியா.. பஃன் மாதிரி இருப்பா மீனா என மேடையேறிய ரஜினிகாந்த் பேசிய ப்ரோமோ காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மேலும், இயக்குநர் சேரன் பேசும் போது மெழுகு பொம்மை, தங்க சிலை போல மீனா சிலை என வர்ணித்து இருந்தார். சதீஷ் பேசும் போது மீனா 20 ஃபேனா இருந்தேன், மீனா 40 ஃபேனா இருக்கேன்.. மீனா பாட்டியா ஆனாலும் ஃபேனா இருப்பேன் என காமெடியாக பேசி மேடையை கலகலப்பாக மாற்றினார்.


ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க என ஆரம்பித்து மேடையில் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ என கேட்டு ரஜினிகாந்திடம் நெற்றியில் முத்தம் வாங்கிக் கொண்ட மீனாவின் மகள் நைனிகாவின் குறும்புத்தனத்தையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த பொண்ணா இப்படி வளர்ந்து விட்டார் என ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.


யார் கண்ணு பட்டுச்சோ தெரியல, மீனாவுக்கு அப்படியொரு சோகம் நடந்து விட்டது என ரஜினிகாந்த் பேசி ஆறுதல் சொல்லும் நிலையில், மீனாவுக்கு அப்படி நடந்திருக்ககூடாது என பல பிரபலங்களும் கணவர் வித்யாசாகரை இழந்து தவிக்கும் மீனாவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாகவும் அந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளனர்.


Advertisement

Advertisement