விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடிப்பவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.அந்த வகையில் இந்த சீரியலில் ஜெனி என்னும் கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் தான் திவ்யா. இவர் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அதில் அவர் சில விடயங்களைக் கூறியிருந்தார். அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் கோபி சேர் பண்ணுவதை எல்லாம் பார்க்கும் போது உண்மையாகவே இப்படியொரு மாமா எனக்கிருந்தால் எண்மையாவே போய் கேட்பேன். சீரியலில் ஜெனி காரெக்டர்ல இருக்கிற மாதிரி இருக்க மாட்டேன். கண்டிப்பா மாமியாருக்காக பேசி இருப்பேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் எப்படியான பையன் வேண்டும் லவ் பண்ண என்று கேட்ட போது அப்படி எல்லாம் ஆசை இல்லை. ஆனால் விட்டிட்டு போகாமல் கூடவே இருந்தால் போதும் நாம நினைப்பது ஒன்று ஆனால் நடப்பது ஒன்று அதனால பிரேக் அப் ஆகாமல் இருந்தால் மட்டும் போதும்.அது மட்டும் தான் ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் திவ்யா இதற்கு முதல் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷை காதலித்து பிரேக் ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தான் அவர் இன்னொரு காதலை ஏற்றுக் கொள்ள முதல் இப்படியொரு கன்டிஷனை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!