கண்ட நாள் முதல் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இதையடுத்து அழகிய அசுரா என்கிற தமிழ் படத்தில் நடித்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இதையடுத்து தெலுங்கில் கவனம் செலுத்த தொடங்கிய ரெஜினா, தமிழில் அவ்வப்போது நடித்து வந்தார். அந்த வகையில் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாநகரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சரவணன் இருக்க பயமேன், அதர்வா உடன் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற திரைப்படங்களில் நடித்தார் ரெஜினா.பின்னர் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் விஷாலின் சக்ரா திரைப்படம் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்த ரெஜினா, அப்படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார். அவரது ரோலுக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
தற்போது தமிழில் இவர் கைவசம் பார்டர், கருங்காப்பியம், சூர்ப்பனகை ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இவ்வாறு தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் பேட்டியளித்துள்ள இவர் எனக்கு மேக்கப் போடுவது சுத்தமா பிடிக்காது ஷுட்டிங் மற்றும் இன்டர்வியூக்கு போகும் போது தான் மேக்கப்போடுவேன். மற்றும்படி மேக்கப்போடுவதே பிடிக்காது. எனக்கு முதலில் நல்ல தலைமுடி இருந்திச்சு. என் பிரண்ட்ஸ் என்னை குதிரைனு கூப்பிடுவாங்க. குதுரை வாலுமாதிரி என் தலை முடிஇருப்பதால் அப்பிடிக் கூப்பிடுவாங்க என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!