• Sep 20 2024

பிலிம்பேர் விருது பெற எனக்கு விருப்பமில்லை-அவங்க மேல வழக்கு போட போகிறேன்: கங்கனா ரணாவத்தின் அதிரடி முடிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் கங்கனா ரணாவத். இவர் ஹிந்தியில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.அத்தோடு தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் மறைந்த பழம் பெரும் நடிகை ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். இப்படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கியிருந்ததோடு இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.


இந்த நிலையில் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பிலிம்பேர் விருது இவரை நாமினேட் செய்துள்ளது. ஆனால் இதற்கு தெரிவித்து கங்கனா வழக்குப் போடுவதாக தெரிவித்துள்ளார். அதாவது பிலிம்பேர் ஞாயமே இல்லாமல் விருது வழங்குவார்கள் அவர்களின் விருதைப் பெற எனக்கு விருப்பமில்லை. விருதுப் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறும் பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்தப் பதிவுக்கு பிலிம்பேர் விருது வழங்கும் நிறுவனம் கங்கனா ரணாவத் இதுவரை எங்களிடமிருந்து 5 விருதினைப் பெற்றிருக்கின்றார். இந்த நிலையில் இவர் திடீரென இப்படி சொல்வது அதிர்ச்சியளிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement