• Sep 20 2024

ஒரு முட்டாளைக் காதலித்தேன், அதனால் தான் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்- ஓபனாகப் பேசிய நடிகை கிரண்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் கிரண்.இவர் ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.இப்படம் மாபெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது. தொடர்ந்து  வில்லன், அன்பே சிவம், நியூ, வின்னர் போன்ற படங்களிலும் நடித்திருக்கின்றார்.

கோலிவுட்டின் கனவு நாயகியாக கிரண் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் படவாய்ப்புக்கள் குறைந்ததால் சினிமாவை விட்டு விலகினார்.பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திருமலை படத்தில் விஜய்யுடன் ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.


அதன் பிறகு விஷால்  நடித்த ஆம்பள படத்தில் விஷாலுக்கு ஆண்டியாக நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் கார்த்தி நடித்த சகுனி படத்திலும் ஒரு துணை  கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படவாய்ப்புக்கள் இல்லாததால் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

கிரண் தற்போது தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கிரண் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகின்றது. அதாவது கிரண் ஒருவரை காதலித்தாராம்.

ஆனால் தான் காதலித்தது ஒரு வடிகட்டிய முட்டாள் என்றும் அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன் என்றும் அதுதான் என் வாழ்க்கையில் எடுத்த  மோசமான முடிவு என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் பெண்கள் பொதுவாக காதலில் விழுந்து எல்லாவற்றையும் இழந்து வீக் ஆகிவிடுகின்றனர் என்றும் கூறினார்.


மேலும் காதல் செய்வது தவறு ஒன்றுமில்லை.நான் ஒரு முட்டாள் மற்றும் அந்த நேரத்தில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதனால் தான் என் வாழ்க்கையில் பலவற்றை இழக்க நேரிட்டது என்று கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement