• Sep 21 2024

'அந்த நடிகையைப் பார்ப்பதற்காக தினமும் ஹோட்டலுக்கு செல்வேன்'- முதல் முதலாக மனம் திறந்து பேசிய கார்த்தி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கலகலப்பான நடிகராகவும் கிராமத்து கதையம்சம் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் தான் கார்த்தி. இவர் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் விருமன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் திரைக்கு வரக் காத்திருக்கின்றது. இந்த நிலையில் கார்த்தி அண்மையில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இவர் அண்மையில் கலந்து கொண்டு பேசிய பேட்டி இப்போது வைரலாகி வருகின்றது.

அதாவது கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த போது, தான் நடிகர் சிவக்குமாரின் மகன் என்று தெரிந்ததும், தன்னை சட்டை பட்டனை கழட்டிவிட்டு "தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்" பாடலுக்கு ஆடும்படி ராகிங் செய்ததாகவும், தனது தந்தை சிவக்குமார் நடனம் ஆடத் தெரியாமலேயே அந்தக் காலக்கட்டத்தில் சமாளித்ததாகவும், அதனை வீட்டில் கிண்டல் செய்வேன் எனவும் கார்த்தி கூறியுள்ளார்.

தன் தந்தை சிவக்குமாருடன் நடித்த நடிகைகளில் தனக்கு மிகவும் பிடித்த நடிகை அமலா எனவும், தான் பள்ளியில் படிக்கும்பொழுது அமலா ஒரு உணவகத்தை சென்னையில் நடத்திக் கொண்டிருந்ததாகவும், உணவு வாங்கும் சாக்கில் அமலாவை அடிக்கடி சென்று வேடிக்கை பார்த்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி சமீபத்தில் அமலாவை நேரில் சந்தித்தபொழுது, சிறு வயதில் நீ என் ஹோட்டலுக்கு வருவாய், ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டதாகவும், தான் ஒன்றும் தெரியாதது போல் நின்றதாகவும் கார்த்தி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் சிம்ரன் பிடிக்குமா அல்லது ஜோதிகா பிடிக்குமா என்று ஆன்கர் கேட்ட கேள்விக்கு தனது அண்ணி ஜோதிகாவின் நடிப்புதான் பிடிக்கும். மொழி திரைப்படம் ஒன்று போதும் அவர்களின் திறமையை நிரூபிக்க. வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகவில்லை. போதும் என்றுதான் தனது அண்ணி நடிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொண்டதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் நடிக்க வந்த புதிதில் எந்தப் பெண்ணையும் காதலிக்கக் கூடாது என்று ஒரு கண்டிஷன் போட்டுதான் அம்மா தான் நடிப்பதற்கு சம்மதித்ததாகவும், ஆறு ஆண்டுகளாக தனக்கு பெண் பார்த்து யாரும் செட் ஆகாததால் ஒரு கட்டத்தில், யாரையும் காதலிக்கிறாயா என்று கேட்டதாகவும், இதை முன்னரே சொல்லியிருந்தால் இந்நேரம் ஒரு பெண்ணை காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருப்பேன் என்று ஆதங்கப்பட்டதாகவும் கார்த்தி அந்தப் பேட்டியில் கலகலப்பாக பல தகவல்களை பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement