• Sep 20 2024

பிறக்க முதலே உயிரிழக்க வேண்டியது, அம்மாவாள் தப்பித்து விட்டேன்- மனம் உருகப் பேசிய நடிகை ஷில்பா ஷெட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி திரையுலகில் பிரபல்யமான நடிகையாக வலம் வரபவர் தான் ஷில்பா ஷெட்டி. ஹிந்தியில் முன்னணி நடிகர்களுடன் இணந்து நடித்த இவர் தற்பொழுது  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி வருகின்றார்.இவர் நடித்த சுகி படம் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியாகப்போகிறது.இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. 

அந்த வகையில், சமீபத்தில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில், அவரின் பிறப்பினை பற்றியும் அவரின் அம்மாவின் செயல் பற்றியும் கூறியிருக்கிறார். ஷில்பா ஷெட்டியின் அம்மா கருவுற்றிருக்கும்போது, அவருக்கு மிகவும் அதிகமான உதிரப்போக்கு இருந்தது. அப்போது மருத்துவர்கள் அவரிடம் அந்த கருவை கலைக்க பரிந்துரைத்திருக்கிறார்கள். 


ஏனென்றால், அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அந்த கருவினால் அவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.இருப்பினும், நம்பிக்கையுடன், குழந்தையை பெற்று எடுப்பேன் என நம்பிக்கையாக அவரின் அம்மா கூறியிருக்கிறார். சொந்த பந்தங்களும் கருவை கலைக்க கூறியிருக்கிறார்கள் ஆனால், ஷில்பா ஷெட்டியின் அம்மா அதனை கேட்கவில்லை.


 ஒன்று அம்மாவிற்கு ஆபத்து ஏற்படும் இல்லையென்றால் குழந்தை இறந்துவிடும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இருப்பினும், அவரின் அம்மாவின் நம்பிக்கையால் ஷில்பா ஷெட்டி பிறந்தார். தாயும் சேயும் நலமுடன் இருந்தார்கள். எனவே, ஷில்பா ஷெட்டி பிறப்பால் தான் ஒரு போராளி என்று கூறினார். அவரின் இந்த பேச்சை கேட்டு அங்கிருந்த பலர் கண் கலங்கினார் என்பதுமட குறிப்பிடத்தக்கது.


 


Advertisement

Advertisement