• Sep 20 2024

நான் எப்படி ரோட்டில் உருள முடியும் எனக்கு என்று ஒரு தகுதி இருக்கு- ஷுட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த நடிகை சரண்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் தமக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த பல நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன்.நாயகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதனைத் தொடர்ந்து மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, அஞ்சலி, உலகம் பிறந்தது எனக்காக போன்ற இன்னும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். மிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

80களில் தனது திரைப் பயணத்தை ஆரம்பித்த இவர் திருமணத்திற்கு பிறகு 2003 ஆம் ஆண்டு அலை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த சிம்பு, திரிஷா போன்ற பல நடித்திருந்தனர்

அஜித், விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சசிகுமார், உதயநிதி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அம்மாவாக நடித்திருப்பதோடு தற்பொழுதும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில்

2006 ஆம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில் வெளியான எம் மகன் படத்தில் உள்ள ஒரு சீனில் தான் நடித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது வடிவேலு மற்றும் பரத் இருவரும் அருகில் இருக்க, சரண்யா குழாயில் வரும் தண்ணீரை எடுத்து மேலே ஊற்றி கொண்டு அங்கபிரதட்சணம் செய்வது போல காட்சி ஒன்று இருக்கும். இவர்கள் மூவரையும் தேடி நாசர் வருவார். அந்தக் காட்சிகள் நடிப்பதற்கு சரண்யா பொன்வண்ணன் மிகவும் தயங்கினாராம்.

மக்கள் அனைவரும் நடந்து செல்லும் அந்த பாதையில், எவ்வாறு நான் அந்த காட்சியை நடிப்பேன் என்று நடிக்க ஒப்புக் கொள்ளவே இல்லையாம். எனக்குன்னு ஒரு தகுதி இருக்கு நான் எப்படி ரோட்டில் எல்லாம் உருளுவேன் என்று கேட்டுள்ளார். வடிவேலுவும் இவங்க செய்யலைன்னா பரவால்ல சார், நான் அந்த காட்சியை செய்து கொடுக்கிறேன் என்று சொன்னாராம். ஆனால் இயக்குநர் திருமுருகன் இந்த காட்சியை நீங்கள் செய்தால் மட்டுமே நல்லா இருக்கும் என்று தன்னை கன்வின்ஸ் செய்ததாக கூறியுள்ளார்.

எப்படி இருந்தாலும் ரோட்டில் நான் உருள மாட்டேன் என்று கூறியுள்ளார் சரண்யா, ஆனால் இயக்குநர் திருமுருகன் சரண்யாவை தனியாக அழைத்துச் சென்று இந்த சீனுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை கூறியுள்ளார். அதன் பிறகு ஒரு மனதாக, வேறு வழி இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டாராம் சரண்யா. ஆனால் அந்த சீன் இவ்வளவு ஹிட்டாகும் என்றும், அந்த காமெடி சீன் இந்த அளவுக்கு ரீச் இருக்கும் என்றும் தன் எதிர்பார்க்கவில்லை என்றும் மனம் திறந்து கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்து.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement