• Sep 20 2024

"எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கு"-உண்மைகளை உடைக்கும் சித்ரா கணவரின் 10வருட நண்பன்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல விஜேவாகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சித்ரா. கால்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் .

ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இப்படியான சூழலில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் தற்கொலைக்கு காரணம் ஹேமந்த் தான் என அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மார்ச் 2021 ஆம் ஆண்டில் ஜாமினில் வெளிவந்தார்.இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீஸில் புகார் அளித்துள்ளார் ஹேமந்த்.

சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளார் ஹேமந்த். அதாவது எனது மனைவியின் மரணத்திற்கு ஒரு மாபியா கும்பல் தான் காரணம்.அந்த மாபியா கும்பலிடம் பணம் கேட்டு மிரட்டுவம் வா என என்னை 7 பேர் கொண்ட குழு மிரட்டுகின்றது. நான் அதற்கு ஒத்துழைக்கவில்லை.அதனால் என்னை கொலை பண்ணிடுவோம் என மிரட்டுகிறார்கள். எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.அந்த ஏழு பேரில் ஒருவர் தான் ஹேமந்தின் 10வருட நண்பர் இமாணுவேல்.இவர் தற்போது ஊடகம் ஒன்றிற்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதில் ஹேமந்தின் நண்பர் பல உண்மைகளை உடைத்து கூறுகின்றார். அதில் நாங்க எந்த தப்பும் பண்ணவில்லை.அவனுக்கு தெரியும் யார் தப்பு பண்ணிணது என்று .ஹேமந் ரிமாண்ட் பண்ணும் வரை நான்கு நாள் அவன் என்னோடு தான் இருந்தான்.இவன் சரியான பிராடு.

சித்ரா தனக்கு நெருங்கிய நண்பர் சித்ரா இறந்ததின் பிற்பாடே இவர்கள் திருமணம் செய்தது எனக்கு தெரிய வந்தது.அப்போது தான் நினைத்தேன் ஏன் இவனைப்போய் திருமணம் செய்தார் என்று.இவன் பணபலம் இருக்கும் பெண்களை குறிவைத்து ஏமாத்திறது தான் இவனுக்கு வேலை. இப்படி சித்ரா இறந்ததின் பின் என் காரில் தான் வந்து கொண்டு இருந்தான்.பெரிய ஆக்களுக்கு எல்லாம் போன் செய்து எப்படியாச்சும் என்னை காப்பாத்திடுங்க எது வேணாம் பண்ணுறேன் என கேட்டு கெஞ்சினான்.அவங்கள் கதைச்ச ஆடியோ முதல் இவர்கள் கதைச்ச ஆடியோ வரை எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கின்றது.

ரோகித் என்ற ஒரு நண்பர் இந்த விசயங்களை பற்றி சொன்னார் தானே நீங்க ஏன் இவ்வளவு நாளும் சொல்லவில்லை, நீங்கள் தான் அந்த மாபியாவா என்ற கேள்வி அந்த தொகுப்பளரால் கேட்கப்பட அதற்கு பதிலளிக்கிறார் ஹேமந்தின் நண்பர்.எங்கள் குடும்ப காசு இவனிடம் சிக்கி இருக்கின்றது. எங்கள் குடும்ப காசு 3 கோடி காசு இவனிடம் சிக்கி இருக்கிறது .அதை பெற்றுவிட்டதன் பிற்பாடே என்னிடம் இருக்கும் ஆதாரங்கள் முழுவதையும் கொடுப்பதாக இருந்தேன் . நாங்கள் அந்த மாபியா இல்லை.அவன் நல்லா நடிக்கிறான். அவன் தான் ஜெயிலுக்கு போனதால் நிறைய பேரை தெரிஞ்சு வைச்சு இருக்கிறான்.இவன் தான் என்னை நிறைய பேரை வைத்து விரட்டினான்.இவன் மீடியா ப்ரசர் இருந்ததால் தான் இவன் தப்பிக்க முடியாமல் போனது.இல்லை என்றால் இவன் காப்பாத்துப்பட்டு இருப்பான்.

என் போனில் தான் நிறைய ஆதாரங்கள் உள்ளது.அத்தோடு அந்த ரோகித் எனக்கும் நண்பர் தான் .அவர் தற்பொழுது வைத்தியசாலையில் உள்ளார்.அவரை லாறி வைத்து அடித்து தற்போது உடம்பிற்கு முடியாமல் படுத்து கிடக்கிறார்.இவனிடம் ஆள் பலம் நிறைய இருக்கு என கூறுகின்றார்.அத்தோடு சித்ரா இறந்ததன் பிற்பாடு இவனின் ரூம் நான் தான் கிளியர் பண்ணினேன்.அங்கு கஞ்சா, ஆயிரக்கணக்கான காண்டம்,10 போத்தல் பீர் என்று நிறைய இருந்தது.இதை தெரிய வர ஹேமந் கேட்கிறான்.அது பத்திரமா இருக்குதா அது எங்கையும் கிடைக்காது பாண்டிச்சேரியில் இருந்து எடுத்து வந்தது என கேட்கிறான்.அப்போது தான் நினைத்தேன் இப்படி ஒரு பெரிய விசயம் நடந்திருக்க பீர் போத்தல் பத்திரமாக இருக்கிறதா என கேட்கிறான்.

அத்தோடு இவன் என்னிடம் கூறினான் .நான் நிறைய தப்பு பண்ணி இருக்கேன் என்று கூறினான்.இவன் செய்த பல விசயங்கள் என் போனில் உள்ளது என பல உண்மைகளை கூறினார்.இவ்வாறு இருக்கையில் சித்ராவின் மரணத்திற்கு காரணமான அந்த குற்றவாளி சிக்குவரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement