தமிழ் சினிமாவில் காதல் திருமணத்தில் இணைந்த பல நடிகர் மற்றும் நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் தான் சினேகா- பிரசன்னா தம்பதியினர். இவர்கள் இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம் காதல் வயப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடனும் மிகவும் பிரமாண்டமாக கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சந்தோஷமாக தமது திருமண வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்த தம்பதியினர் இன்றைய தினம் தமது 10 வது திருமண நாளை துபாயில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதனால் திருமண நாளுக்கு பிரசன்னா சினேகாவிற்கு தன் வாழ்த்து மூலம் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “ சினேகா இந்த பத்து வருடங்களில் நமக்குள் சண்டைகள், பிரச்சினைகள் எல்லாம் வந்திருக்கின்றன. நானும் உன் இதயத்தை சுக்கு நூறாக உடைத்திருக்கிறேன்,
நிறைய பிரச்சினைகளை கொடுத்திருக்கிறேன்,எனினும் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு நீ என்னை விட்டு பிரியாமல் எனக்கு முழு பலமாக இருந்திருக்கிறாய், நீ கிடைத்ததற்கு நான் ஆண்டவனிடன் நன்றி சொல்லிக்கிறேன்” என கூறியுள்ளார். இதற்கு சினேகாவின் பதில் என்ன என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!