கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக ' உருவாகி வரும் திரைப்படம் தான் 'பத்து தல'.இந்தத் திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதோடு அவருடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியிலும் 5ஆம் கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்தது
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்திரை அணையில் நடந்தது. இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு ஐதராபாத் நகரில் நடந்து வருகிறது. இப்படமானது டிசம்பர் மாதம் 14ம் திகதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது
இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக், தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "என் வாழ்நாளில் இதைவிட உண்மையான மனிதரை நான் சந்தித்ததில்லை. அவரது கிராஃப்ட்டுக்கு உண்மையாக இருக்கிறார்.வேலையில் சுவாரஸ்யமாக படைப்பாற்றலுடன் உள்ளார். மிக முக்கியமாக, அவர் உண்மையிலேயே எப்படி உணருகிறார் என்பதைக் வெளிக்காட்ட பயப்படுவதில்லை.
உங்களுடன் வேலை பார்த்தது உண்மையிலேயே மகிழ்ச்சி சிலம்பரசன் அண்ணன்" என கௌதம் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.இந்தப் பதிவு வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!