• Sep 20 2024

அஜித் ஒரு ஏமாற்றுக்காரன் ஆதாரம் என்கிட்ட இருக்கு- அதிர்ச்சித் தகவலைக் கூறிய பிரபல தயாரிப்பாளர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித். கடைசியாக அவர் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படம் வெளியானது. வலிமை படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தை தொடர்ந்து வெளியான துணிவு படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு ரசிகர்கள் நல்ல ரிசப்ஷனை கொடுத்திருந்தனர்.

துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பிறகு விக்னேஷ் சிவன் வெளியேறி மகிழ் திருமேனி படத்துக்கு உள்ளே வந்தார். கதைக்கான ஒன்லைனை பிடித்துவிட்டாலும் அதற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு ரொம்பவே மெனக்கெட்டார் மகிழ்.


இந்நிலையில் அஜித் தன்னை ஏமாற்றிவிட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். அதாவது, 1995ஆம் ஆண்டுவாக்கில் தனது அப்பா, அம்மா ஊருக்கு செல்லக்கூட காசில்லை என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் பணம் கேட்டாராம் அஜித். உடனே யோசிக்காமல் மாணிக்கமும் கொடுத்திருக்கிறார். அதனையடுத்து அஜித், நான் நல்ல நடிகனாக வந்த பிறகு டேட் தருவதாக மாணிக்கம் நாராயணனிடம் உறுதியளித்தாராம்.

அதன் பிறகு அஜித் நடித்த ஒரு படத்துக்கு 15 லட்சம் ரூபாய்வரை பணம் கொடுத்தாராம் மாணிக்கம் நாராயணன். அப்போது அஜித், வேறு ஒரு படத்தில் நடிக்கும்போது அட்ஜெஸ்ட் செய்து கொடுத்துவிடுகிறேன் என்றிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அஜித் பணம் கொடுக்கவில்லையாம். அப்போது மாணிக்கம் நாரயாணனிடம் அஜித்துக்கு பணம் கொடுத்த ஆதாரம் எதுவும் இல்லாத சூழலில் இப்போது ஆதாரத்தை கண்டுபிடித்துவிட்டாராம். 


எனவே அஜித் அந்த பணத்தை கொடுப்பாரா என்ற கேள்வியை அவர் முன்வைத்திருக்கிறார். இந்தத் தகவல்களை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்தார். மேலும் அந்தப் பேட்டியில் பேசிய அவர்,அஜித் பத்திரிகைக்காரர்களுக்கு பணம் கொடுத்து தன்னைப்பற்றி நல்லவிதமாக எழுத சொல்கிறார் என்றும் கூறினார். மாணிக்கம் நாராயணன் வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement