• Sep 20 2024

ரோலக்ஸ் ரோலில் நான் தான் நடிக்க வேண்டியது: பிரபல மலையாள நடிகர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி வெளியானது.பலரும் எதிர்பார்த்த இவ் திரைப்படம் தற்போது வரை சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான்கு வாரங்களில் 400 கோடிகளை வசூல் செய்த விக்ரம் படம் நாளை 25வது நாளை எட்ட உள்ளதாம்.

படத்தின் 25வது நாள் கொண்டாடத்திற்கு முன்பாகவே படக்குழுவினர் சக்சஸ் மீட் நடத்தி விட்டனர்.அந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. ரசிகர்கள் விக்ரமின் வசூல் சாதனையை தினம் தினம் கொண்டாடி வருகின்றனர்.

விக்ரம் இன்னும் எத்தனை சாதனைகளை முறியடிக்க போகிறது என்பதை பார்க்க ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஆவலாக உள்ளது என்று தான் கூற வேண்டும்.

விக்ரம் படத்தை பொறுத்தவரை முதலில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது கமல்.

அவருக்கு பின்னர் படத்தில் அதிகம் பேசப்பட்ட கேரக்டர் க்ளைமாக்சில் வரும் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் தான். இப்போது வரை ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்களே சூர்யாவை ரோலக்ஸ் என்று தான் குறிப்பிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டது அந்த கேரக்டர் மற்றும் பெயர்.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், ரோலக்ஸ் கேரக்டரில் முதலில் நடிக்க என்னை லோகேஷ் அணுகினார் என்றும் ஒரு சில காரணங்களால் என்னால் நடிக்க முடியவில்லை என்றும் அதனால் அதனை அடுத்து சூர்யா அந்த கேரக்டரில் நடித்தார் என்றும் கூறியுள்ளார். அவரது இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement