இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் படிக்காதவன்.இப்படத்தில் விவேக் நடித்திருந்த அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடித்திருந்தது வடிவேலு தான். வடிவேலு நடித்த பல காட்சிகள் இப்படத்தில் படமாக்கப்பட்ட நிலையில், தீடீரென ஒரு நாள் படத்தில் இருந்து விலகிவிட்டாராம்
அதாவது இப்படத்தில் நடிகர் சுமன் கால்களை பிடித்து நடிப்பது போல் நகைச்சுவை காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும்.அந்த காட்சியில் சுமன் கால்களை பிடித்து நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் வடிவேலு.
இதுமட்டுமின்றி, வடிவேலுவுக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம்.படப்பிடிப்பின் போது, இயக்குநரின் பேச்சை கேட்காமல் தன் போக்கில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலுவிடம் சென்று, இயக்குநர் சொல்வதை போல் நடிங்க என்று தனுஷ் கூறினாராம்.
இதனால், கடுப்பான வடிவேலு சந்திரமுகி படத்தில் ரஜினிக்கே சில விஷயங்களை நான் சொல்லிக்கொடுத்தேன். இங்கு அவருடைய மருமகன் எனக்கு சொல்லி கொடுக்கிறார் என்று சத்தம் போட்டுள்ளாராம்.
இதனால் தான் வடிவேலு இப்படத்தில் இருந்து விலக விவேக் அதனை சிறப்பாக நடித்துக் கொடுத்தாராம்.இதனை அப்படத்தில் நடித்து ஒரு முக்கிய நடிகர் பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கவர்ச்சியில் எல்லை மீறும் மௌனராகம் சீரியல் நடிகை- பிஞ்சிலேயே நல்லா பழுத்திருச்சு போல
- நண்பர்கள் சூழ தனது பிறந்தநாளை சிறப்பித்த நடிகை மாளவிகா மோகனன்
- என் மகளுக்கு நான் அறிவுரை கூறினால் பிடிக்காது- அதிதி பற்றி ஷங்கர் குறிப்பிட்ட முக்கிய விடயம்
- புதிய படத்தில் கதாநாயகனாகும் சமுத்திரக்கனி- மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கும் தம்பி ராமையா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!