நேற்று தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் வெளியாகி இருந்தது. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் ஹவுஸ்புல்லாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது.படம் பார்க்க சிலர் ரோஹினி திரையரங்கிற்கு வந்துள்ளனர், அவர்கள் டிக்கெட் வாங்கியும் திரையரங்கிற்கு உள்ளே படம் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
அந்த சம்பவத்தை ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட வைரலானது, பலரும் கண்டனம் தெரிவித்தார்கள்.அதன்பிறகு அந்த மக்கள் திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள்.இருப்பினும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க இன்றைய தினம் சூரியின் விடுதலை படம் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்க்க திரையரங்கிற்கு வந்த சூரியிடம் தியேட்டரில் நடந்த இந்த சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் இப்படி பண்ணியிருக்க கூடாது காலையில தான் இதைக் கேள்விப் பட்டேன். தியேட்டர் என்பது எல்லோருக்கும் சமமான ஒன்று இதிலை வந்து பாகுபாடு பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.
மேலும் விடுதலை படம் ரிலீஸ் எப்போ ஆகும் என்று எல்லோரும் கேட்டிட்டு இருந்தாங்க அதே மாதிரி இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இது கேட்கவே சந்தோஷமாக இருக்க. ஆனால் விடுதலை படத்தை நான் இன்னும் பார்க்கல உங்களோட சேர்ந்தீருந்து பார்க்க தான் தியேட்டருக்கு வந்திருக்கிறேன். இந்த ஒரு நல்ல படத்தில் நானும் இருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கு. ரசிகர்கள் எல்லோரும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். எல்லோருக்குமே ரொம்ப நன்றி என்றும் கை கும்பிட்டு சொல்லி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!