தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. இவர் இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் வித்தியாசமாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது கதாநாயகனாக இயக்குநர் பாலா இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருவதோடு ஜு.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மேலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து சூர்யா தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா நியூயோர்க்கில் ஐ. நா-வுக்கான இந்தியத் தூதர் டி. எஸ் திருமூர்த்தியை சந்தித்துள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த டி.எஸ் திருமூர்த்தி சூர்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- என்னையா இப்படி பண்ணிடீங்க- ராஷ்மிகாவுக்கு பதிலாக வெளிநாட்டு நடிகைக்கு முன்னுரிமையா?
- யோகிபாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள”பன்னிக்குட்டி” படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த படக்குழு
- திரைப்பட பயிற்சி மாணவர்கள் உருவாக்கத்தில் அற்றைத் திங்கள் அந்நிலவில் என்னும் புதிய படம்
- நடிகர் விஜய்க்கு மாளவிகா மோகனன் கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் மெசஜ் என்ன தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!