பொன்னியின் செல்வன்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் பான் இந்திய திரைப்படமாக தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது.
இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம்பிரபு,நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாக உள்ள நிலையில்,இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் ப்ரமோஷனுக்காக த்ரிஷா பேசும்போது ரசிகர்கள் லியோ படத்தின் அப்டேட் கொடுக்கும் படி கத்திக் கூச்சலிட்டனர். இதனால் த்ரிஷா லியோ ஷுட்டிங்கில் இருந்து தான் வாரேன்.உங்க தளபதி நல்லா இருக்காரு என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இனி நிறைய அப்டேட் கொடுக்க முடியாது மற்ற விஷயங்களை லியோ இவன்டில் கொடுக்கிறேன் என 4ற ரசிகர்கள் கத்திக் கூச்சலிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!