பாலிவூட் நடிகையான சன்னிலியோன் தற்பொழுது தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளிலும் படுபிஸியாக நடித்து வருகின்றார். அந்த வகையில் தமிழில் ஓ மை கோஸ்ட் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் சன்னி லியோன் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு இணையத்தில் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
மேலும் கர்நாடகாவில் ஒரு கிராமத்தினர் அவருக்கு பெரிய கட்டவுட் வைத்து பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடி இருக்கின்றனர். அது மட்டுமின்றி ரத்த தானம் உள்ளிட்ட விஷயங்களையும் செய்து இருக்கின்றனர்.
அதை பார்த்து சன்னி லியோனே ஷாக் ஆகி இருக்கிறார். "என்னால் இதை நம்பவே முடியவில்லை. உங்களை கௌரவப்படுத்தும் விதமாக நானும் ரத்த தானம் செய்கிறேன். நன்றி. என்னை ரொம்ப ஸ்பெஷல் ஆக உணர வைக்கிறீர்கள். லவ் யூ" என தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!