உன்னுடைய மாஸ்டர் பிளான் என்னவென்று எனக்கு தெரியும், என்கிட்டே வச்சுக்காத என ரவீந்திரனை குற்றம் சாட்டும் வனிதா.
பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரனும் சீரியல் நடிகை மஹாலட்சுமியும் அண்மையில் இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.இவர்கள் திருமணம் முடிந்த நாளில் இருந்து ட்ரெண்டிங் ஜோடியாகவே வலம் வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் திருமணம் குறித்து அடிக்கடி நடிகை வனிதாவும் சர்ச்சைக்குரிய பதிவுகளை போட்டு வருகின்றார்.அதற்கு காரணம் நடிகை வனிதா பீட்டர் பாலைத் திருமணம் செய்திருந்த போது பீட்டரின் முதல் மனைவி பிரச்சனை செய்தார். அவருக்கு ஆதரவாக பேசி வனிதாவுடன் மோதினார் ரவீந்தர்.
தற்போது ரவீந்தர் சீரியல் நடிகை மஹாலட்சுமியை திருமணம் செய்ததற்கு கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தார். 'கர்மா இஸ் எ B***H' என வனிதா அதை பற்றி டுவிட் போட்டிருந்தார்.அதற்கு பதில் சொன்ன ரவீந்தர் "என் வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை" என வனிதாவுக்கு பதிலடி கொடுத்தார்.
இதனை அடுத்து வனிதா அளித்திருக்கும் பேட்டியில் ரவீந்தர் பற்றி பேசி இருக்கிறார். "எல்லாம் பிளான் பண்ணி, ஸ்டண்ட் create பண்ணி.. (என் திருமணத்தை) மொத்தமாக காலி பண்ணிடீங்க. Mind your own business என தான் நான் அவருக்கு அப்போதே அட்வைஸ் கூறினேன்."
"அவருடன் சண்டை எல்லாம் இல்லை, அதன் பிறகு பேசி இருக்கிறேன். ரவீந்தர் உன்னுடைய மாஸ்டர் பிளான் என்னவென்று எனக்கு தெரியும், என்கிட்டே வெச்சிக்காத" என்றும் "நீங்க எதுக்கு பேட்டி கொடுத்துட்டு இருக்கீங்க. கமெண்டை எல்லை disable பண்ணிட்டு போய் வாழ்க்கையை பாருங்க. அந்த டுவிட்டை நான் பொதுவாக தான் போட்டேன்" என்றும் வனிதா மேலும் குறிப்பிட்டு இருக்கிறார்.
Listen News!