அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் விக்ரமின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இப்படம் வரும் 31ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இதனால் இப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது. இதற்காக திருச்சி, மதுரை, கோவை போன்ற அடங்களுக்குச் சென்று ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர நேற்று சென்னையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விக்ரம் நடிகைகள் ஸ்ரீநிதி செட்டி, மிருணாளினி ரவி ஆகியோர் சென்றிருந்தனர்.அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.
அந்த நிகழ்வில் நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மூன்று வருடங்களுக்கு முன்பு, அஜய் ஞானமுத்துவின் கற்பனை மற்றும் எண்ணத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அதற்காக இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று அப்பா கூறினார். அதேபோல் மகான் படப்பிடிப்பில் சில காட்சிகளில் நான் சோர்வடைந்தேன். ஆனால் அப்பா எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் எனர்ஜியாகவே இருந்தார்.
அது எப்படி என்று அவரிடம் கேட்டேன். அதற்கு நடிகராக பல கஷ்டங்களையும், போராட்டங்களையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனவே இதெல்லாம் சாதாரணம் என்று கூறினார் என துருவ் விக்ரம் நெகிழந்தார். மேலும் அதை அவரிடம் இருந்து தானும் கற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.
Listen News!