விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் பாவனி ரெட்டி. இந்த சீரியல் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர் இது தவிர ரெட்டைவால் குருவி ராசாத்தி போன்ற சீரியல்களில் நடித்திருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து சீரியலில் நடிப்பதைத் தவிர்த்து வந்த இவர் பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார். அத்தோடு இந்த நிகழ்ச்சியில் தனது முதற்கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார்.
தற்கு பிறகு அதே ஷோவில் வைல்டு கார்டு என்டிரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் என்பவர் பாவனியிடம் தனது காதலை சொன்னார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
தற்போது பாவனி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடி வருகின்றனர். அவர்களது நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டார்களா என்கிற கேள்வியை தான் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
இதற்கிடையே பாவனி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து அவருடனான நெருக்கமான எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் அமீர் குறித்து பதிவிட்டது மட்டுமின்றி அவரை love you da எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பாவனி ஒரு வழியாக தனது காதலை ஒப்புக்கொண்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- முஸ்லீம் பெண்ணின் வாழ்க்கையை எடுத்துக் கூறும் புத்தம் புதிய சீரியல் ஜமீலா- வித்தியாசமான புரோமோ
- நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கவுள்ள நீதிமன்றம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!