பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி வாரியர். ஜுலை 14ம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தினை இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ளார். அத்தோடு இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் லிங்குசாமி, உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், நடிகர் விஷால் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, “நிறைய பேரை அடிக்கடி மிஸ் பண்றேன். ரெண்டு கண்ணு இருக்கறதுனால கண்ணீர் ரெண்டு கண்ணிலிருந்து மட்டும் வருகிறது. எனக்கு உடம்பு மொத்தம் கண் இருந்தால் அனைத்திலும் கண்ணீர் வரும். ராம் சார் பணத்தை மூலையில் இருந்து சம்பாதிக்கணும், மனிதர்களை மனதில் இருந்து சம்பாதிக்கணும் என்றார்.
அந்த வகையில் நான் நிறைய மனிதர்களை மனதிலிருந்து சம்பாதித்திருக்கிறேன். இந்த விழாவிற்கு ஷங்கர் சார், மணிரத்னம் சார், பாரதிராஜா சார் எல்லாம் வந்துருக்காங்க. ஒரு காலத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி இவர்களில் வாசலில் போய் நின்றேன். ஆனால் இப்போது அவர்கள் இன்று எனக்கு துணையாக வந்து நிற்கிறார்கள். இதை விட மிக பெரிய வெற்றி வேறு என்ன இருக்கிறது. இன்று எங்க அம்மாவை கூட்டிட்டு வரலாம் என்று இருந்தேன் ஆனால் உடல் நிலையில் சரியில்லாததால் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போனது. ஒரு வேலை அவர்கள் இங்கு வந்து பார்த்திருந்தால் மிக சரியான பிள்ளையை பெற்றிருக்கிறேன் என்று நினைத்து ரொம்ப பெருமைப்பட்டிருப்பார் என்று அழுத படி கூறினார்.
இதனை தொடர்ந்து அழுதுகொண்டே பேசிய லிங்குசாமி, “எனக்கு வீடு இல்லாமல் இருக்கலாம், அலுவலகம் இல்லாமல் இருக்கலாம், கார் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் சம்பாதித்த மனிதர்கள், நண்பர்கள் எனது வாழ்க்கை முழுவதும் கூட இருப்பார்கள். அதுதான் எனது வெற்றி. ஊரிலிருந்து இங்கு நான் எதையும் எடுத்து வரவில்லை, நான் மட்டும் தான் வந்தேன், இது போன்ற மனிதர்கள் சம்பாதிப்பதுதான் எனது குறிக்கோள்” என்றும் மிகவும் கவலையாகத் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சாய் பல்லவியின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள கார்கி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்
- இரு பெரும் ஹீரோக்களுக்கு வில்லனாகும் நடிகர் விஜய் சேதுபதி
- திருமணம் முடிந்த கையோடு ஸ்ராட் மியூசிக் அஜய் கிருஷ்ணா எடுத்த திடீர் முடிவு
- மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகை ரச்சிதாவின் கணவர்-அதுவும் எந்த டிவியில் தெரியுமா?
- பத்திரிகையாளர் சந்திப்பில் கதறி அழுத பிரபல நடிகை- ஆறுதல் படுத்திய சாய்பல்லவி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!