• Sep 21 2024

இதை நான் செய்வேன் என்று நினைக்கவே இல்லை- மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்த யாஷிகா ஆனந்த்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் இதற்கு முதல் கவலை வேண்டாம் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து துருவங்கள் 16, விஜய் தேவர்கொண்டாவின் நோட்டா, யோகி பாபுவுடன் ஜாம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் கடந்த ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் விபத்துக்குள்ளானார்.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது பூரண குணமடைந்துள்ளார்.

விபத்திற்கு பிறகு மீண்டும், சமூக வலைத்தளங்களில், ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டு சாவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து , சொந்த வீடு வாங்கி, என் அம்மா அப்பாவின் கனவை நான் நிறைவேற்றுவேன் என என் வாழ்வில் ஒருபோதும் நினைத்ததே இல்லை.இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் மிக தாமதமாகப் பகிர்ந்துகொள்வதற்கு மன்னிக்கவும்.

கொரோனா மற்றும் நான் சந்தித்த மோசமான விபத்தால், இந்த வீட்டுக்குள் வரமுடியாமல் போனது. தற்போது தான் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. இப்போது தான் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என மிகவும் நெகழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement