• Sep 20 2024

“பாடகர் பம்பா பாக்யாவின் குடும்பத்துக்காக இறைவனை வேண்டுகின்றேன்- இரங்கல் தெரிவித்த நடிகர் கார்த்தி

stella / 2 years ago

Advertisement

Listen News!


இந்திய சினிமாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ராவணன் திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகியவர் தான்  பாடகர் பம்பா பாக்யா.இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகிய சர்கார் படத்தில் ‘சிம்டாங்காரன்’ பாடலையும் பிகில் படத்தில் 'காலமே காலமே' என்கிற உருக்கமான பாடலையும் பாடி இருந்தார்.

இது தவிர எந்திரன் 2.0 படத்தில் வரும் புள்ளினங்காள் பாடல், சர்வம் தாள மயம் படத்தில் வரும் பாடல்கள் என்பவற்றைப் பாடியுள்ளார்.அண்மையில் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் பாடி இருக்கின்றார்


இந்நிலையில் உடல்நலக்குறைவால் திடீரென சென்னையில் நேற்று நள்ளிரவு மரணம் அடைந்த பம்பா பாக்யாவின் மறைவு குறித்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் நடிகர் கார்த்தி, தமது டுவிட்டில்,  “பாடகர் பம்பா பாக்யாவின் திடீர் மரணம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த மாபெரும் இழப்பை தாங்கும் வலிமையை அவருடைய குடும்பத்திற்கு கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்!” என குறிப்பிட்டு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement