• Sep 20 2024

என் முதல் மனைவியும், இரண்டாவது மனைவியும் கேட்டதால் தான் ஓகே சொன்னேன்- வரலக்ஷ்மி விஷயத்தில் கறார் காட்டும் சரத்குமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் வரலக்ஷ்மி . இவர் கதாநாயகியாக மட்டுமல்லாது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வில்லி கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவர்  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தேன், ஆனால் அப்பா ஒப்புக்கொள்ளாததால் அதில் நடிக்க முடியாமல் போனது என கூறினார்.


இப்படி பல படங்களை தான் மிஸ் செய்ததாக வரலக்ஷ்மி கூறி அதிர்ச்சி கொடுத்து இருந்தார்இந்நிலையில் இது பற்றி சரத்குமார் விளக்கம் கொடுத்து இருக்கிறார். வரலக்ஷ்மி நடிக்க வருவது எனக்கு பிடிக்கவில்லை. என் விருப்பத்தை மீறி தான் அவர் தற்போது நடிக்க வந்திருக்கிறார்.

'ஒரு படமாவது நடிக்கட்டும்' என என் முதல் மனைவியும், இரண்டாம் மனைவி ராதிகாவும் ஒன்றாக வந்து கேட்டார்கள். அதனால் தான் போடா போடி படத்தில் நடிக்க அனுமதித்தேன் என சரத்குமார் கூறி இருக்கிறார். 

Advertisement

Advertisement