தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மலையாள நடிகை மாளவிகா மோகனன், இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் என்னும் படத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
இதன் பின்பு தனுஷுடன் இணைந்து மாறன் என்னும் படத்தில் நடித்தார். இது தவிர தெலுங்கு, ஹிந்தியிலும் கூட படங்களில் நடித்து வரும் மாளவிகா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜாலியாக வெளியூர்களுக்கு கிளம்பி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
குறிப்பாக மாலத்தீவுக்கு அடிக்கடி விசிட் அதிப்பதையும் கவர்ச்சி புகைப்படங்கள் எடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்தநிலையில் அந்த சுற்றுலாவில் ஒரு சிறு மாற்றமாக நமது நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தடோபா வனவிலங்கு சரணாலயத்திற்கு தனது தோழிகள் இருவருடன் விசிட் அடித்துள்ளார் .
இந்த சரணாலயத்தில் புலிகள் மற்றும் சிறுத்தைகள் இருப்பதை கேள்விப்பட்டதில் இருந்தே அங்கே போக வேண்டும் என்பது தனது ஆசையாக இருந்ததாக கூறியுள்ள மாளவிகா, இந்த வன பயணத்தின்போது இரண்டு புலிகளையும் ஒரு சிறுத்தையையும் மிக அருகில் பார்த்ததாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!