ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.இந்த படம் நிச்சியமாக வெற்றி பெரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி, ரம்யா நம்பிசனை வைத்து பீட்சா என்ற படத்தை உருவாக்கி இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் சுப்பராஜ். பேய் படம் ஜானரில் வித்தியாசம் காண்பித்து உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டாகி திரையுலகத்தின் கவனம் இயக்குனர் கார்த்திக் மீது திரும்பியது.
அதனை தொடர்ந்து சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோரை வைத்து ஜிகர்தண்டா திரைப்படத்தை இயங்கினார். மதுரையை கதை காலமாக வைத்து தனது பாணியில் கொடுத்திருந்தார்.அந்த படம்மும் மெகா பிளாக் பஸ்டர் ஆகி கார்த்திக் சுப்பராஜை ட்ரெண்டாக்கியது. இரண்டே படங்களில் தவிர்க்கமுடியாத இயக்குனர் ஆகிவிட்டார் அவர்.
தற்போது ராகவா லாரன்ஸ் , sj சூர்யா அவர்களை வைத்து ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை இயங்கி இருக்கிறார்.இவர் இந்த திரைப்படத்தையும் வித்தியாசமான முறையில் வழங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த திரைப்படமானது தீபாளியை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது.
இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ராகவா ஜிகர்தண்டா முதல் பாகத்தில் நான் நடித்திருக்க வேண்டும் ஆனால் முடியாமல் போனது இப்பொது இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை கார்த்தி மிகவும் அருமையாக உருவாக்கியுள்ளார். நிச்சியமாக படம் வெற்றி அளிக்கும் என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
Listen News!