• Sep 20 2024

இதற்காக நிறைய கஷ்டப்பட்டேன்- இது தான் என்னுடைய கனவு- பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ந்த த்ரிஷா

stella / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வுக்கு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்

இவர்களுடன் படக்குழுவினர் மணிரத்னம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.இவர்களை தவிர  நடிகர் சித்தார்த், அதிதிராவ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி நடைபெறுகிறது. அதில் பொன்னியின் செல்வன் பாடல்களை பாடுகிறார்


இவ்விழாவில் பேசிய நடிகை த்ரிஷா, “நான் இதுபோன்ற மிகப்பெரிய விழாக்களுக்கு கொரோனா தொற்றுக்கு பின் வந்ததில்லை. படத்தில் செந்தமிழ் பேச நிறைய கஷ்டப்பட்டோம். மணிரத்னம் சார் படமென்றால் நிறைய உழைப்பு இருக்கும்.


ராணியாக ஒரு கதாப்பாத்திரம் பண்ண வேண்டும் என்பது எனது கனவு. அது தற்போது நடந்து இருக்கிறது. ஐஸ்வர்யா ராய் உள்ளேயும், வெளியேயும் மிகவும் அழகானவர். குந்தவை மற்றும் நந்தினி எனும் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தை நேருக்கு நேர் நின்று நடித்தது நன்றாக இருந்தது” என்றும் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement