தமிழ் சினிமாவில் முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தான் அருண் விஜய். இப்படத்தைத் தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி, கண்ணால் பேசவா, போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் இவரை சிறந்த நடிகர் என்று அறிமுகப்படுத்தி படம் பாண்டவர் பூமி தான்.
இப்படத்தைத் தொடர்ந்து ஆக்ஷ்ன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி வம், வேதா, மலை மலை, துணிச்சல், மாஞ்சா வேலு, தடையறத் தாக்க போன்ற பல படங்களில் நடித்தார். இருப்பினும் தனக்கென தனி அடையாளத்தை அவரால் உருவாக்க முடியவில்லை. அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து புகழ் பெற்ற நடிகராக மாறினார்.
இந்த படத்தில் அவர் நடிப்புக்காக சிறந்த வில்லனுக்கான விருதும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகின்றார். அந்த வகையில் அவரது நடிப்பில் தற்பொழுது ானை என்னும் படம் உருவாகி வருகின்றது. விரைவில் ரிலீஸ் ஆகவும் உள்ளது.யானை படத்திற்குப் பிறகு அருண் விஜய் அக்னி சிறகுகள், பாக்சர், சினம் போன்ற பல படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் அருண் விஜய் ஆர்த்தி என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை கூறியுள்ளார் .அதில் கூறியிருப்பதாவது ," முதன் முதலில் தன் மனைவியை பார்க்கும் பொழுது எவ்வளவு பெரிய ஹீல்ஸ் போட்டுருக்க என்று கேட்டுள்ளார். இதைக் கேட்ட அவரது மனைவி நீங்களே பாத்துக்கோங்க என்று செருப்பை காட்டியுள்ளார். தன் மனைவி ஆர்த்தி கொஞ்சம் ஷார்டாக தான் இருப்பார் என்றும், அவர் உயரத்திற்கும் அவர் செய்யும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு வர வேண்டிய மனைவி சிம்ரன் போல் உயரமாகவும், உதட்டின் மேல் மச்சம் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்ததாகவும், தன் மனைவி பார்பி டால் போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததாகவும் அருண் விஜய் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- இதைக் கேட்க நல்லாத் தான் இருக்கு ஆனால் அது உண்மையில்லை- ரசிகர்களுக்கு தனது பாணியில் விளக்கம் கொடுத்த பிக்பாஸ் ராஜு
- நமிதாவை மட்டும் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்- இப்படி செய்தால் எப்படி பிடிக்காமல் போகும்- சரத்குமார் கூறிய அதிர்ச்சித் தகவல்
- அட இதனால் அஜித் அவசர அவசரமாக ஐரோப்பாவிற்கு பைக் டூர் சென்றாரா?- செம சர்ப்ரைஸ் ஆக இருக்கே
- நடிகர் நாசர் வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்-இப்படியா நடிக்கனும்..!
- ஆத்தங்கரை மரமே பாடலில் வந்த பேச்சியம்மாவா இது….அடடடே..எப்படி இருக்கிறாங்க தெரியுமா; இதோ புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!