விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரிஷோ தான் கதாநாயகி. இந்த நிகழ்ச்சியின் முதல் எப்பிஷோட் இன்றைய தினம் ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சியினை பாலா மற்றும் குரேஷி ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளனர் அத்தோடு நடுவர்களாக இயக்குந் கே.எஸ் ரவிக்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில ருபீனா, ருபிசீனா என்னும் இரட்டைச் சகோதரிகள் முதலில் தமது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் தம்முடைய நடிப்பை முடித்தவுடன் ரவிக்குமார் நீங்க எந்த ஊரில் இருந்து வாறீங்க என்று கேட்டார். அதற்கு அவர்கள் பொல்லாச்சி என்று சொல்ல ரவிக்குமார் அந்தப் பக்கம் தான் நிறைய சூட்டிங் பண்ணியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அப்போது அவர்களும் நாங்க இதைக் கேள்விப்பட்டிருக்கிறோம் எங்க அப்பா சொல்லியிருக்காரு, நீங்க சூட்டிங் நடத்தின இடத்தில எல்லாம் இப்போ வீடு வந்திடுச்சு, அங்க தான் நாங்களும் இருக்கிறோம் என்று சொல்கின்றனர். அப்போது ராதிகா அவர்களைப் பாராட்டியதோடு தன்னுடைய முதல் பட அனுபவம் பற்றியும் கூறியுள்ளார்.
அதாவது தன்னுடைய முதல் படத்தில் இயக்குநர் என்னை வெட்கப்படச் சொன்னாரு, அப்போ நான் அப்பிடி என்றால் என்ன என்று கேட்க அவர் எனக்கு குளோசப் வைச்சிட்டு ஒரு குச்சி எடுத்து இடுப்பில அந்த குச்சியால தொடுவாரு அப்போ நான் ஒரு மாதிரி சிரிப்பேன் அதை தான் வெட்கம் என்று சொன்னாரு, அப்போ தான் எனக்கு வெட்கம் என்றால் என்ன என்று தெரியும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ராதிகா நரம்பில்லாத நாக்கால எல்லாருமே நிறையப் பேசுவாங்க யார் பேசுறதையுமே நாம கேட்க கூடாது. நம்முடைய கனவுகள் நிஜமாகனும் என்றால் அதுக்காக கடுமையாக உழைக்கனும் உழைப்பு மட்டும் தான் எப்போதும் நம்மளை வாழ வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!