• Sep 20 2024

திருமணம் செய்ய வேண்டும் என்ற நெருக்கடி எனக்கும் இருந்தது-மனம் திறந்த ஆண்ட்ரியா!

stella / 1 year ago

Advertisement

Listen News!

சரத்குமார், ஜோதிகா நடிப்பில் வெளியான  பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக  ஆண்ட்ரியா . இதனைத் தொடர்ந்து படவாய்ப்புக்கள் அதிகரித்ததால் பல படங்களில் நடித்து வருகின்றார். இது தவிர பின்னணி பாடகியாகவும் இருக்கின்றார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பிலும் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வரும் இவரது நடிப்பில் வெளியாகிய தரமணி மற்றும் வட சென்னை உள்ளிட்ட படங்கள் அவருக்கு கூடுதல் பாராட்டுகளை பெற்றுத் தந்தன.இது தவிர சமீபத்தில் வெளியான 'மாஸ்டர்', 'வட்டம்' மற்றும் 'அரண்மனை 3' ஆகிய படங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார்.


தற்போது  ‘அனல் மேலே பனித்துளி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் நேரடி ஓடிடி வெளியீடாக சோனி லைவ் தளத்தில் நவ.18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த  பேட்டியில் திருமணம் குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். அதில் "ஒரு 20 வயதுக்கு மேல் இருந்து 30 வயதுக்குள் ஐய்யயோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமே, யாரையும் சந்திக்கவில்லையே என்ற நெருக்கடி எனக்கும் இருந்தது. நான் இப்போது அதை தாண்டி வந்து விட்டேன். நிறைய பேர் வந்து கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் சந்தோசமாக இல்லை.

 அதே போல, நிறைய பேர் திருமணம் செய்து கொள்ளாமல் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு எந்த மாதிரியான வாழ்க்கை வரும் என்று எனக்கு தெரியாது. ஆனால்; எதுவாக இருந்தாலும் என்னுடைய சந்தோசத்திற்கு நான் தான் பொறுப்பு. அது தான் மிக முக்கியம்." என ஆண்ட்ரியா கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement