கேஜிஎஃப் படத்தைப்பார்த்து மோசமாக கொலைகள் செய்த இளைஞர் கைதாகியுள்ளதாக கூறப்படுகின்றது.இவர் கேஜிஎஃப் பாணியில் சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார் என்பதும் முக்கியமாகும்.
தென்னிந்திய சினிமாவில் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கேஜிஎஃப் . இப்படமானது இதுவரை 2 பாகங்களாக வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.இதனைத் தொடர்ந்து இதனை் மூன்றாம் பாகமும் உருவாகி வெளியாகவுள்ளது. இதில் கதாநாயகனாக கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்தார் என்பதும் முக்கியமாகும்.
இந்த நிலையில் தற்பொழுது இப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.அதாவது மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சாலையில் உறங்கும் காவலாளிகள் தொடர்ந்து தலையில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டு கிடந்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார் சிவபிரசாத் என்கிற 19 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.
தொடர் கொலையாளி 19 வயது சிவபிரசாத் கொலை செய்வது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்ததை வைத்து தேடியதில், கொலைச் செய்யப்பட்டவரின் செல்போனை எடுத்துச் சென்று வைத்திருந்ததன் மூலம் டிராக் செய்ததில் சிக்கினார். தான் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும்போது கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் இரட்டைவிரலை காட்டி மகிழ்ச்சியுடன் சென்றார் சிவபிரசாத்.
மேலும் போலீஸ் விசாரணயில் ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த கேஜிஎஃப் படத்தைப் பார்த்த சிவபிரசாத் தானும் டான் ஆகிவிட வேண்டும் என்று நினைத்ததாகவும், டான் போல கொலை செய்தால் பெரிய டான் ஆகி கைநிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்து முதற்கட்டமாக தனியார் பாது காவலர்களை குறி வைத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
கொலை செய்த ஹீரோ தண்டனை எதுவும் இல்லாமல் பலராலும் போற்றப்படுவதும், பெரிய அளவில் வசதியாக இருப்பதும், மற்றவர்கள் ஹீரோவை பார்த்து அஞ்சி நடுங்குவதையும் யதார்த்த வாழ்க்கை நிலை உணராமல் எடுத்துக்கொண்டது அவர் மனதில் குரூர எண்ணம் தோன்ற காரணமாக அமைந்துள்ளதோடு பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!