தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டுகளில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராகக் காணப்பட்டவர் தான் பிரசன்னா. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றன. இருப்பினும் இவரது படத் தெரிவுகளால் சில காலம் படவாய்ப்பின்றி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகை சினேகாவை இவர் திருமணம் செய்ததோடு இவருக்கு இரண்டு பிள்ளைளும் உள்ளனர். இந்த நிலையில் தற்பொழுது ரி என் ரி கொடுத்து கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ’கண்ட நாள் முதல்’. இந்தப் படத்தில் கதாநாயகியாக லைலா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பின் தற்போது ’பிங்கர் டிப்’ என்ற வெப்தொடரின் இரண்டாவது சீசனில் பிரசன்னாவுடன் லைலா நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ’கண்ட நாள் முதல்’ படத்தில் நடிக்கும்போது நான் குழந்தை போல் இருந்தேன் என்றும் அப்போதெல்லாம் நான் சினிமாவுக்கு புதிது என்றும் அவர் கூறினார். இதற்கு பதில் கூறிய பிரசன்னா ’கண்ட நாள் முதல்’ படத்தில் நடிக்கும் போது எனக்கும் 20 வயதுதான் என்று கூறியது நகைச்சுவையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சந்தியாவை கொலை செய்ய வந்த செல்வம்.. கடைசியில் காத்திருந்த ருவிஸ்ட் -இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- நடிகை மீனாவின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? சொக்கிப்போன ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!