தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுப்பதில் முக்கிய நடிகராக விளங்கும் விக்ரம் தற்பொழுது கோப்ரா என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியானது திருச்சியில் ஒரு கல்லூரியில் நடத்தப்பட்டது.
அப்போது மேடையில் விக்ரம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பற்றி பேசும்போது "நான் காலேஜ் படிக்கும்போது கேஜிஎப் படம் பார்த்தேன். அப்போது ஸ்ரீநிதி ஜோடியாக யாஷ்-க்கு பதிலாக நான் நடித்து இருக்கலாம் என தோன்றியது" என விக்ரம் கூற அனைவரும் ஷாக் ஆனார்கள்.
தான் சொன்னது பொய் என பின்னர் விக்ரம் கூறினார்.'அவர் காலேஜ் படிக்கும்போது அந்நியன் படம் பார்த்தாராம், அதற்காக தான் இப்படி கூறினேன்" என கூறி ஸ்ரீநிதியை கலாய்த்து இருக்கிறார்.
மேலும் விக்ரம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!