• Sep 20 2024

திருமணமான நடிகருடன் தவறான உறவில் இருந்தேன்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய நடிகை ஆண்ட்ரியா- அந்தப் பிரபலம் யார் தெரியுமா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பின்னணி பாடகியாக வலம் வருபவர் தான் ஆண்ட்ரியா. இவர் சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்லுறியா மாமா.. என்னும் பாடலைப் பாடி இருந்தார். இப்பாடல் வேற லெவலில் வெற்றியும் பெற்றது.

மேலும் இவர் கடந்த 2007ம் ஆண்டு இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து, முதல் படத்திலேயே ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.


இதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆளு, போன்ற பல படங்களில் நடித்த இவர், கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் 1 மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

இப்படி பல படங்களில் நடித்திருந்தாலும், இவர் நடிப்பில் வெளியான 'தரமணி' மற்றும் 'வட சென்னை' ஆகிய படங்கள் இவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் இவர் சில கவிதைகளையும் எழுதி வெளியிட்டு வந்தார். 


இந்நிலையில் ஆண்ட்ரியா திருமணமான பிரபலம் ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாக வெளிப்படியாக கூறி, அதனால் ஏற்பட்ட வலியின் காரணமாகவே சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

திருமணமான ஒரு பிரபலத்துடன் தவறான உறவு வைத்திருந்தேன், அந்த நபர் என்னை மனதளவிலும், உடலளவிலும் அதிக காயப்படுத்தினார். நான் அப்போது செய்த தவறால், என் வாழ்க்கையே இருண்டு போனது.  அதில் இருந்து வெளியே வர பல கவிதைகள் எழுதினேன்.

 ஆதீத மன உளைச்சலுக்கு ஆளான நான், அதில் இருந்து விடுபட ஆயூர்வேத சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வளவு தகவலை சொன்ன அவர், அந்த நபர் யார் என்பதை மட்டும் கூற மறுத்துவிட்டார்.தற்போது ஒருவழியாக அந்த வலியில் இருந்து மீண்டு, படப்பிடிப்புகள், பாடல்கள், போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement