தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் 1400க்கும் மேற்படட படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடினை ரமா பிரபா. இவர் பெரும்பாலும் தெலுங்கு சினிமாவில் பிரபல காமெடி நடிகரான ராஜா பாவுவுடன் இணைந்து அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.அந்த வகையில் பட்டணத்தில் பூதம், வசந்த மாளிகை, சாந்தி நிலையம் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் கூட கலகலப்பு 2 பாகத்தில் நடித்திருந்தார். 80 மற்றும் 90 களில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு இணையாக சொத்துக்களை சம்பாதித்த இவர் 1974ஆம் ஆண்டு சரத் பாபு என்பவருடன் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் சரத் பாவு 1990ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகரான எம்.என்.நம்பியாரின் மகளான சினேகாவை திருமணம் செய்து கொண்டார்
சரத் பாபு தன்னை ஏமாற்றி சொத்துக்களை பறித்து கொண்டதாக நடிகை ராம பிரபா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது அப்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அதற்கு நடிகர் சரத்பாபுவும் தன்னுடைய கருத்தை தெளிவாக கூறியிருந்தார்.
இப்படியிருக்கும் போது சமீபத்தில் ஐதராபாத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராம பிரபா பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் தான் சம்பாதித்த பணத்தை முழுவதும் ஒரு கட்டத்தில் இழந்து நடு ரோட்டிற்கு வந்த தன்னுடைய வாழ்க்கையை பற்றி கூறியிருந்தார். மேலும் அப்படி ஒரு நிலைமையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தனக்கு உதவி செய்ததாக கூறியிருந்தார். ரஜினிகாந்தும் பல கஷ்டங்களை தன்னுடைய வாழ்க்கையில் கடந்து வந்தவர் தான். எவ்வளவு உயரத்திற்கும் சென்றாலும் அவருடைய அடக்கமும் உதவி கேட்டு வருபவர்களை வெறும் கையோடு அனுப்பும் பழக்கம் அவனுக்கு கிடையாது.
அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவி கேட்டு சென்றவர்களில் நானும் ஒருவர். மொத்த சொத்துக்களையும் இழந்து தெருவில் நின்ற எனக்கு கைச்செலவுக்கு பணம் கொடுத்தால் போதும் என்றுதான் சென்றிருந்தேன். அப்போது அதனை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் அங்கு சென்று என்னுடைய நிலைமையை கூறியதும் ரஜினிகாந்த் மிகவும் வருத்தப்பட்டு அப்போதே 40 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அப்போது 40ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய பணம். அந்த பணத்தின் மூலம் என்னுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்த்தேன். இந்த உதவி செய்த அவருக்கும் நான் என் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருப்பேன் என்று அதே பேட்டியில் கூறியிருந்தார்
Listen News!