• Sep 20 2024

நான் ஒவ்வொரு நாளும் புது புடவை தான் கட்டுவேன்- தன்னுடைய ரெஸ்ஸிங் சீக்ரெட்டை கூறிய நடிகை நளினி

stella / 2 years ago

Advertisement

Listen News!

80களில் இருந்து இன்று வரை தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ள நடிகை தான் நளினி.1981ம் ஆண்டு வெளியான ராணுவ வீரன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இப்படத்தைத் தொடர்ந்து ஓம் சக்தி, சரணாலயம், மனைவி சொல்லே மந்திரம், தங்கைக்கோர் கீதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் 100 படங்களுக்கு மேல் நடித்த இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டுகளில் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அந்த வகையில் கோலங்கள், சின்ன பாப்பா பெரிய பாப்பா, மாதவி, வாணி ராணி, சந்திரலேகா, கோகுலத்தில் சீதை போன்ற பல ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார்.தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வள்ளி திருமணம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை நளினி தன்னை பற்றி கூறிய விஷயங்கள் பலரால் பகிரப்பட்டு வருகின்றது.அதாவது எப்பொழுதும் அழகான புடவை, ஆடை அணிகலன் என்று அழகாக இருப்பவர் நளினி. தற்போது இதற்கான சீக்ரெட் வெளிவந்துள்ளது.பொதுவாகவே நடிகைகள் இடத்தில் அதிகமாக விதவிதமான உடைகளும் நகைகளும் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் நளினி கூறிய இந்த விஷயம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது ட்ரெஸ்ஸிங் சென்சை பற்றி அவர் கூறுகையில். நான் ஒரு தடவ கட்டின புடவையை மறுமுறை கட்டவே மாட்டேன். எப்பொழுதும் புதிய புடவை வாங்கிக் கொண்டே தான் இருப்பேன். ஷூட்டிங் சென்றாலும் அங்கிருக்கும் பிரபல கடைகளில் நான் காட்டன் புடவையாவது வாங்கி விடுவேன். புடவை வாங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

புடவையை வைப்பதற்கு என்று ஒரு தனி வீடே வைத்துள்ளேன். கட்டிய புடவைகள் எல்லாம் அங்கே வைத்து விடுவேன் என்று கூறியுள்ளார் நடிகை நளினி. இன்று புதிய புடவை இருக்கிறதா என்று எனது பிள்ளைகளும் கேட்பார்கள் இல்லை என்றால் உடனே வாங்கி கொடுத்து விடுவார்கள் என்றும் அவர் கூறியதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement