• Sep 20 2024

நான் நிறைய ஸ்கூல்ல படிச்சன்... எனக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தது... விசித்ராவிடம் ஸ்கூல் வாழ்க்கை பற்றி உண்மையை கூறிய ஜோவிகா...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நாளுக்குநாள் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறுகிறது அந்த வகையில் நாமினேஷன் ப்ரொஸ்ஸஸ் முடிந்த பிறகு விசித்ரா மற்றும் ஜோவிகா இருவரும் சமாதானமாக கதைத்து கொண்டு இருக்கிறார்கள். 


விசித்ரா,வினுஷா, ஜோவிகா,யுகேந்திரன் ஆகியோர்  இருந்து கதைத்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது   விசித்ரா ஜோவிகாவை பார்த்து பாடசாலையில் போன நேரம் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளதா என்று கேட்கிறார். அதற்கு ஜோவிகா ஆமாம் நிறைய பிரச்சினைகள் இருந்தது. என்னோட வாழ்க வேற வழில போயிட்டு இருந்தது அதுல ஸ்கூல் பக்கம் யோசிக்க முடியல்ல, எனக்கும் ஆசைதான் ஸ்கூல்ல டொப்பர் எல்லாம் பார்க்கும் போது ஆசையா இருக்கும், ஆங்கிலம் மட்டும் தான் நல்லா வரும் வேறபாடங்கள் நல்லா வராது.முயட்சி பண்ணே ஆனா வரயில்லை  என்று கூறுகிறார்.


மறுபடியும்  விசித்ரா எந்த ஸ்கூல் படிச்ச என்று கேட்ட நான் நிறைய ஸ்கூல் படிச்சேன் , எனக்கு ஒழுங்கா சொல்லித்தந்தா நான் புரிந்துகொள்வேன். மற்ற பிள்ளைகள் அத புரிந்து கொள்வார்கள் எனக்கு விளங்காது நான் போய் டீச்சர் கிட்ட கேட்பேன் அவர் மத்தவங்களுக்கு விளங்குது உனக்கு ஏன் விளங்க இல்ல என்று  கேட்பாங்க , பொறுமையாசொல்லித்தந்தா நான் புரிந்து கொள்வேன் ஆனால் அப்படி நடக்கவில்லை என்று ஜோவிகா கூறுகிறார்.


இப்படி இருவரும் பொறுமையாக முடிந்த எபிசோட்களிலும் கதைத்து இருந்தால் ஒருவேளை நாமினேஷன் லிஸ்டில் இருந்து இருக்கமாட்டார்கள் போலத்தான் விளங்குகிறது.   

Advertisement

Advertisement